நித்தம் ஒரு யுகம்
சத்தமில்லாத பகல்
சந்தமில்லாத பாடல்
சொந்தமில்லா வாழ்க்கை
சொர்க்கமில்லா பூமி
சுவாசமில்லா உயிர்
ரசிக்காத மனம்
ருசிக்காத உணவு
சிறகில்லா பறவை
அர்த்தமில்லா கவிதை
அழகில்லாத முகங்கள்
அருவருப்பாய் சுரங்கள்
ஆறுதலாய் நட்பு-இங்கு
புரியாமல் நான்...............
அறியாமல் நீ-ஆனால்
இரவில் மறவாமல்-திறந்தது
சொர்க்கத்தின் கதவுகள்
உன் வரவால்..........
நினைவுகளுடன்.... உங்கள் நண்பன்
பாலா
2 comments:
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே.........
Post a Comment