இந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...
28 May, 2011
நீ இல்லாத உலகம்
நித்தம் ஒரு யுகம்
சத்தமில்லாத பகல்
சந்தமில்லாத பாடல்
சொந்தமில்லா வாழ்க்கை
சொர்க்கமில்லா பூமி
சுவாசமில்லா உயிர்
ரசிக்காத மனம்
ருசிக்காத உணவு
சிறகில்லா பறவை
அர்த்தமில்லா கவிதை
அழகில்லாத முகங்கள்
அருவருப்பாய் சுரங்கள்
ஆறுதலாய் நட்பு-இங்கு
புரியாமல் நான்...............
அறியாமல் நீ-ஆனால்
இரவில் மறவாமல்-திறந்தது
சொர்க்கத்தின் கதவுகள்
உன் வரவால்..........
நினைவுகளுடன்.... உங்கள் நண்பன்
பாலா
Subscribe to:
Posts (Atom)