அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

27 April, 2011

இயற்கை அன்னை



காலைச் சூரியன்
உதிக்கும் நேரம்....
காக்கை கூட
கரைந்து பாடும்....
முரட்டுச் சேவல்
அவன் வரவை எண்ணி
கொக்கரித்தே
சேதிகள் கூறும்...
அழகுப் பூக்கள்
அவனைக் கண்டு-இதமாய்
புன்னகைத்தே
காதல் கூறும்....
நிலவுப் பெண்ணும்
வெட்கம் கொண்டு
வானில் எங்கோ
மறைந்து போகும்....
இத்தனை அழகையும்
ஒன்றாய் கண்டால்
கவிதை நெஞ்சில்
தானாய் ஊறும்.........


இணையத்தில் என் கவிதை இதழ் பதித்த முதல் முத்ததுடன்...........

உங்கள் நண்பன்
பாலா