அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

15 January, 2011

காக்டெயில்_-*-_--__-

 


வாழ்த்துக்கள் சீமான் 

                       அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளதே சீமான் தன்மான அரசியல் புரட்சி அனல் தெறிக்கும் பரப்புரை எல்லாம் இனி அம்பேல் தானா? ஏன்னா அங்கே போனால் அடிமை சாசனம் எழுதி வாங்குவாங்கனு கேள்விப் பட்டேன். ( எல்லாம் ஒரு சந்தேகம் தான்,,)
ஈழ மக்களுக்கு கலைஞர் ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கவே நீங்கள் ஜெயலலிதாவை தேர்தல் கூட்டணிக்கு தேர்ந்தெடுத்து இருந்தால் இதையும் கொஞ்சம் நினைவு படுத்துகிறேன்.மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சொன்னவர் தானே ஜெயா அவர்கள், ப.சி.அவர்களின் தேர்தல் வெற்றியில் நடந்த சித்து விளையாட்டு உங்களுக்கு மறந்து போய் விட்டது போலும் , குஜராத்தில் ரத்த வேட்டை நடத்தி குருதி ஈரம் காயும் முன் (தமிழகத்தின் எல்லா இயக்கங்களும் எதிர்த்தும் )தமிழக மண்ணில் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைக்கப் பெற்ற மோடி ஜெயா அவர்களால் எப்படி உபசரிக்க பட்டார் என்பதை மறந்து போய் விட்டீர்கள் போலும், வைகோ வையும் மரம் வெட்டியாரையும் இவர் படுத்தியபாடை உங்கள் நினைவுக்கு மறுபடியும் தந்துவிட்டு கனத்த இதயத்தோடு ஒரே ஒரு கேள்வி மட்டும் உங்களிடம் பார்பனீய எதிர்ப்பு தீண்டாமை ஏழைகள் பற்றியெல்லாம் இனி நம்மால் மேடையில் முழங்க முடியுமா? சீமான் அவர்களே............. நான் தமிழன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

திருந்தவே மாட்டீங்களாடா.......



                                    கவுண்டமணி நிறைய படத்துல சொல்லுவர் பாருங்க இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு எங்கயாவது போய் பிச்சை எடுக்கலாம்னு, எனக்கு மேலே உள்ள நோட்டீஸ் பார்த்த உடன் அந்த வசனம் தான் நினைப்பு வந்தது 10-வது தமிழர் சங்க விழாவுக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுக்கும் இவனுக அழைத்துள்ள சிறப்பு விருந்தினரை பார்த்திங்களா தமிழனுக்கும்,தமிழுக்கும் குஷ்புவுக்கும் என்னடா தொடர்பு ?

வருடம் முழுவதும் நிலத்தில் உழைத்துவிட்டு தான் உழைத்ததன் களைப்பை போக்க,தன் வீரத்தையும்,அன்பையும் வெளிக்காட்ட இந்த பொங்கல் திருநாளை தமிழன் பயன்படுத்திக் கொண்டான். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கரகம், கும்மி, கபடி போன்ற வீரம் மற்றும் தன் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளில் மூழ்க வேண்டிய இந்த திருநாளில் கத்தார் தமிழர் சங்கம் அழைத்து இருக்கும் சிறப்பு விருந்தினர் யார் என்று மேலே உள்ள படத்தை சொடுக்கி பாருங்கள், குத்தாட்டம், குலுக்கும் குமரிகளையும் வாரா வாரம் டி.வி. யில் பார்ப்பது போதாமல் நேரில் அழைத்து தங்கள் தமிழர் உணர்வை பறைசாற்றும் போர்வையில் பொங்கலை காரணாமாக வைத்து பணம் பண்ண நினைக்கும் காலாச்சார கொலைகள் செய்யும் கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளை மானங்கெட்ட பசங்களா உங்கள் வீட்டில் உள்ள பெண்களை கொண்டுவந்து குத்தாட்டம் போட வைத்து காசு பார்க்கலாமே என கேட்க தோன்றுகிறது எழுத்து நாகரீகம் கருதி அதை சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இது தான் தேசபக்தி 

             இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்
 பிரக்யாசிங் என்ற கில்மா சாமியார்(,முழுமையான விபரத்திற்கு இங்கே செல்லவும்) அசீமானந்தா போன்ற அபினவ் பாரத் என்ற பாசிச தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர் இன்னும் நிறைய தேசப்பற்று நிறைந்த தலைவர்கள் இந்த சதி வலையில் சிக்கும் முன்பு இந்த வழக்கை விசாரணை செய்த (A.T.S) தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் சரியாக திட்டமிடப் பட்டு காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 
இந்நிலையில் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிக் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 11 பேர் மீதும் மகாராஷ்டிர அரசு திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தீவிரவாதத் தடுப்புச் சட்டமாகும். கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டது இது.

(இந்த நிலையில் பெரும் திருப்பமாக தனி நீதிமன்றம், திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்று கூறி அதை ரத்து செய்து விட்டது. மேலும், சாதாரண கோர்ட்டில் வழக்கமான வழக்காக இதை விசாரிக்குமாறும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.                   (ஆதாரம் :வைகறை வெளிச்சம்  )

            ஆனால் சென்ற வாரம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மறு விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது C.B.I-இந்த வழக்கை எப்படி கொண்டு செல்லும் என்று பார்போம்.

(சம்பந்தமேயில்லாமல் குணங்குடி ஹனிபா அவர்களை வெடிகுண்டு வழக்கில் கைது செய்து பிணையே கொடுக்காமல் 12 வருடங்கள் சிறையில் வைத்து அனுப்பிய இதே அரசுகள்தான் இன்று மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இவர்களுக்கு இந்த வழக்கையே சாதாரண வழக்காக மாற்றி இருக்கிறது நீதித்துறை காவிமயமாக மாறிவருவதற்கு இதெல்லாம் உதாரணம் ) 

தாமதமாக கிடைக்கும் நீதி கொலைக்கு சமம் 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

எப்புடி.....சமீபத்தில் பார்த்து சிரித்தது 




= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

எங்கே சென்றீர்கள் கோவையில் கொதித்தவர்கள் ?


கீழே இருக்கும் இரண்டு மொட்டுக்களையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு குழந்தைகளையும் காணவில்லை என்று நாடகம் ஆடிய சைகோ தந்தைய போலீஸ் கைது செய்துள்ளது.

தாஷிபா (3), காஷியா தாஷிபா (2)

       இருபது வருடங்கள் கழித்து இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்ற பயத்தின் காரணமாக கொலை செய்ததாக குழந்தைகளின் தந்தை முகமது அலி வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான். கோவையில் கொலை செய்யப்பட்ட இரண்டு பிஞ்சுகளுக்காக கொதித்த, அந்த கொலைகளை கண்டித்து போராட்டம் மறியல் நடத்திய நம் சமுதாயம்.கொலையாளி ஒருவன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னர்  வெடிகளை கொளுத்தி உண்மையில் நரகாசுரன் கொல்லபட்ட நாள் என்று பாராட்டு மழையில் காவல்துறையையும் தி.மு.க அரசையும் பாராட்டி பின்னர் எல்லாவற்றையும் மறந்துபோகும் நம் சமூகம் இந்த இரண்டு பிஞ்சுகளின் கொலையில் மூச்சு விட காணோமே?என்ன ஆச்சுப்பா உங்களுக்கெல்லாம்.. கோவை கொலையில் பணக்கார வீட்டு பிள்ளைகள் இறந்து போனார்கள் என்பதாலா நீங்கள் இவ்வளவு ஆக்ரோசம் கொண்டு வீதிகளுக்கு வந்தீர்கள். 

( இந்த பிஞ்சுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியை எல்லா ஊடகம் மூலமும் நாம் பார்த்தும் மூச்சு விட ஒரு மனிதன் கூட இல்லாத நிலையில் என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிந்தது...)
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =




இந்த வார காணொளி 



= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஊறுகாய் அசைவ ஜோக் (18+)

   எக்ஸ் ஒரு பெரிய பன்றி மேல் சவாரி செஞ்சுகிட்டு வந்தான். வழியிலே ஒரு நண்பன் அவனை இடை மறிச்சு, பன்றியை பார்த்தபடி, “மச்சான் பன்னி எங்கே கெடச்சுது?” ன்னு கேட்டான்.
எக்ஸ் என்கிட்டே ஒரு பூதம் இருக்கு, என்ன கேட்டாலும்
தரும்ன்னு சொன்னான்
நண்பனுக்கும் உடனே ஆசை வந்துடுச்சு, “நானும் ஒண்ணு கேட்கட்டுமா?”ன்னு கெஞ்சினான்.
சரின்னு எக்ஸ் விளக்கை தேய்க்க, பூதம் வந்து நின்னுச்சு.
உடனே நண்பன் எனக்கு ஒரு சூப்பர் பொண்ணு வேணும்னான். 
மறு நிமிடமே, அவன் கையிலே ஒரு பன்னு மெத்து மெத்துன்னு வந்து நின்னுச்சு.
நண்பன் கடுப்பாகி எக்ஸ்சிடம் , “என்னடா, பொண்ணு கேட்டா, பன்னு  கொடுக்குது?”ன்னு கேட்டான்.
எக்ஸ் உடனே  “பூதத்துக்கு காது கொஞ்சம் டமாரம் மச்சான். நான் மட்டும் என்ன பெரிய பன்னி வேணும்னா கேட்டேன்?


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 


இந்த வார குசும்பு  

                       உன்ன கொல்லாம விடமாட்டேன்


              ஏலேய்.. கடிச்சி.. புடும்.. டா .. அது விஷ வண்டு மாதிரி இருக்கு ....

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் நிறை குறைகளை கருத்துரைகள் என்ற சுட்டியை சொடுக்கி எழுதுங்கள் அது எங்கள் குறைகளை களையவும் எண்ணங்களை செறிவு படுத்தவும் உதவும்..
                                                                         நன்றி - கிறுக்கன் 

No comments:

Post a Comment