அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

03 January, 2011

காக்டெயில்


இந்த வருடத்தின் முதல் காக்டெயில் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் எல்லா நாட்களும் எல்லா வருடமும் நீங்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.


 இலவசம் 


       "தமிழகத்தில் ஏழைகள் நடமாடும் வரை, தி.மு.க., அரசு இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கும்,'' என்று பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

        ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டு இன்னும் ஏழைகள் இருக்கும்வரையில் இலவசம் தருவோம் என்று அறிக்கை வெளியிட தனி மன திடம் வேண்டும் அய்யா தமிழகத்தில் இலவச வேஷ்டி சேலை அரிசி வாங்க இன்னும் ஏழைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உங்கள் ஆட்சியை தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக மக்கள் போற்றுவார்கள்.

        இந்த இலவசம் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க நீங்கள் செய்யும் கண் கட்டிவித்தை என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்களே ? 

        வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!

        ஆம் !  2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள் ஏழைகளுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இல்லை இதுபோல் அறிக்கை கொடுக்க உங்களை தவிர வேறு யார் சரியானநபராக இருக்க முடியும். 
      
        இன்னும் இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டிய செல்வியோ தன் சேனைகள் புடைசூழ கொடநாடு காடுகளையும் இன்னும் தன் தோழி பற்றிய சிந்தனையில் இருந்துவிட்டு இப்போது தேசம் திரும்பி இருப்பதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார் அதனால் உங்களை கேள்வி கேட்க கூடஇப்போது யாரும் இல்லாத நிலைதானே நாம் வைத்தது தானே சட்டம்.

        இப்படி இலவசம்.... இலவசம் ... என்று தமிழகத்தின் மக்களை இன்னும் மாக்களாகவே வைத்திருக்கும் உங்கள் ஆட்சி தொடர வேண்டும்.


எனக்கு ஒரு பழைய திரைப்பட வசனம் ஒன்று நினைவு வருகிறது 


    "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"


சேட் ஜி : ஹரே கிறுக்கன் தலிவர் எழுதுன இளைஞன் எப்போ ரிலீஸ் உனக்கு தெரியுமா ?


(யோவ் சேட்டு நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னா யா "இஞ்சி பச்சடி தொட்டு நக்குடின்னு"குஜால் கதை கேக்குற ... ஓடிடு இல்ல வாய்ல போட்டு இருக்குற பான் ப்ளடு மூக்குல வரும் இப்போ )


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =  


  
    படித்ததில் பிடித்தது : மனிதன்டா 



        உத்திரபிரதேசம் பந்தாவன் -ராவர்ஷாஎன்னும் கிராமத்தில் நாராயணன் நாத் என்ற 70-வது வயது கிழவர் பஞ்சாயத்து தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
   
    நாராயணன் நாத் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
  

    பிச்சை எடுப்பது,கடந்த 40 வருடங்களாக பிச்சை எடுக்கும் நாராயணன் பஞ்சாயத்து தலைவராக சென்ற உள்ளாட்சி  தேர்தலில் அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட பின்னும் பிச்சை எடுத்தே வாழ்க்கை நடத்துகிறார்.

    மேலும் அந்த கிராம மக்களுக்கு பொது கழிப்பிட வசதி மற்றும் பள்ளிக்கூடம் கட்டித் தருவேன் என்று கூறும் இவருக்கு 4 பிள்ளைகள் இவர்கள் யாருமே அரசியலில் இல்லை என்பது தான் முக்கிய செய்தி.

நன்றி : மனோரமா நாளிதழ் 


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =



 .
              காடுகளின் ஆண்டு 


        2011 -ஐ காடுகளின் ஆண்டாக ஐ.நா.சபை  அறிவிப்பு செய்து இருக்கிறது. பூமி வெப்பமடைதல்,பருவம் தவறிய மழை பனிமலைகள் உருகுதல் இவற்றை தடுக்க இந்த அறிவிப்பை செய்துள்ளது.முழு விபரங்களுக்கு முந்தைய காக்டெயில் மரம் நடுவோம்  என்ற இணைப்பை சொடுக்கவும்.

           இன்னும்   காஷ்மீர் முதல் கன்னியாகுமரி   என்ற எங்கள் ஆங்கில வலைப்பூவையும் சொடுக்கவும்.

                                                                                                                                                                         மேலும் http://kashmir2kanyakumari.blogspot.com/ 
 வலைப்பூ மற்றும்  கிறுக்கன்  வலைப்பூவின் நண்பர்கள் இனைந்து இந்த வருட இறுதிக்குள் சுமார் 1 லட்சம் மர கன்றுகளை தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் நடுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம்.
                 
           முதல் முயற்சியாக ஜனவரி-26  அன்று 1000  மர கன்றுகளை திருநெல்வேலி மாவட்டத்தில் நடுவதற்கு ஈகிள் இளங்கோ அவர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். எங்கள் முதல் முயற்சியில் எங்களோடு இணைந்து கொள்ள முன்வந்த  திரு. ஜீவானந்தம் அவர்களுக்கு நன்றி.!

           மேலும்  எங்களோடு இணைந்து இந்த பணியை மாவட்டம் தோறும் கொண்டு செல்ல ஆர்வம் உள்ள நண்பர்களை எதிர்பார்க்கிறோம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
  
இந்தவார விளம்பரம் 
  




= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ஊறுகாய் (18+) அசைவ ஜோக் 



ஒரு சர்தார்ஜி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
நண்பர் சொன்னார் : ” ஏம்பா சன்னல் கதவை சாத்தி
விட்டு பொண்டாட்டிய கொஞ்ச கூடாதா?
நேற்று சன்னல் வழி நீ செய்த ரொமாண்டிக் முழுவதும் பார்த்தேன்
என்றான்.

சர்தார்ஜி பெரிதாக சிரித்துக்கொண்டே நான்தான் நேற்று              
ஊரிலேயே இல்லையேஎன்றாரே பார்க்கலாம்.                                 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

சாலை பாதுகாப்பு வாரம் 


 
                  இந்த வாரம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரமாக அரசு அறிவித்துள்ளது சாலை பாதுகாப்பு குறித்து வெளியான வீடியோ கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து வெளியான விழிப்புணர்வு வீடியோ.





இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைகவசம் அணிவோம்,மகிழுந்துகள் ஓட்டும்போது பாதுகாப்பு பட்டை அணிவோம்.சாலை விதிகளை சரியாக கடைப்பிடித்து விபத்துகளை தவிர்ப்போம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

No comments:

Post a Comment