அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

02 May, 2011

மழைக் காலம்....



மழைச் சாரலே
பனித்தூறலே.....
மண் மீது-ஏனடா
விழுகின்றாய்......
மண் காதலி
உனை கவர்ந்ததால்
கவி பாடி
நீயும் தொடுகின்றாய்....
வெள்ளைச் சிறகுகள்
நீ விரித்து.....
பறந்து வருவதய்
கண்டதாலோ...........
நீ பட்டதும்
விரல் தொட்டதும்
சிலிர்த்து சுகம்
பெற்றதும்....
புத்தம் புது
வாசம் வீசுகிறாள்....
உந்தன் ஊடலில்
பிறந்ததோ.....
உயிரினங்கள்....
உன் பாடலில்
மலர்ந்ததோ....
மலர்ச்செடிகள்...
நீ தொட்டதும்
வருவதோ
புல்வெளிகள்.....
இயற்கை அத்தனையும்- உந்தன்
மறுபிறப்போ...........
மனிதனையும்-உனக்காய்
அழ வைப்பது தான்
உந்தன் சிறப்போ.......?

உங்கள் நண்பன்
பாலா

3 comments:

Unknown said...

i dont believe it,super kavidhai........this s ur own poet ah?

பாலா said...

yeah its my own poet...............frd

arasan said...

சிறப்பா இருக்குங்க நண்பரே

Post a Comment