காலைச் சூரியன்
உதிக்கும் நேரம்....
காக்கை கூட
கரைந்து பாடும்....
முரட்டுச் சேவல்
அவன் வரவை எண்ணி
கொக்கரித்தே
சேதிகள் கூறும்...
அழகுப் பூக்கள்
அவனைக் கண்டு-இதமாய்
புன்னகைத்தே
காதல் கூறும்....
நிலவுப் பெண்ணும்
வெட்கம் கொண்டு
வானில் எங்கோ
மறைந்து போகும்....
இத்தனை அழகையும்
ஒன்றாய் கண்டால்
கவிதை நெஞ்சில்
தானாய் ஊறும்.........
இணையத்தில் என் கவிதை இதழ் பதித்த முதல் முத்ததுடன்...........
உங்கள் நண்பன்
பாலா
6 comments:
ARUMAI
உண்மையிலேயே முதல் கவிதையா...? Nice...
அருமையாக இருக்கிறது
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
சிறப்பா இருக்குங்க நண்பரே ..
உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்.. http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html
என்றும் நட்புடன் உங்கள்
சிநேகிதி
கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்
அன்புடன் உங்கள் நண்பன்
பாலா
Post a Comment