தோழா......!
புத்தாண்டு வாழ்த்துக்களை
உரித்தாக்கு முதலில் - உன்
நெஞ்சம் காணும்
கனவுகளுக்கு...!
கனவுகளை
நினைவுகளாக்கும்
செயல்களுக்கு...!
தூண்டு கோலாய்த்
துணை நிற்கும்
துணிவுக்கு...!
நடைமுறைக்கு
நிழலாய் நிற்கும்
நம்பிக்கைக்கு...!
பின்
உறுதியாய்
நின்று - நீ
உளமாற வாழ்த்துக்கூறு
உற்றாருக்கெல்லாம்...!!
-பூஞ்சோலை
No comments:
Post a Comment